
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்தமையை கௌரவிக்கும் முகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு 800 எண் பதித்த டிசேர்ட்டை முரளிதரனுக்கு பரிசளித்தார்கள். வீரர் வி.பி.சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின், ஜகாதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு முரளிதரனை வாழ்த்தினார்கள்.
இந்த விழாவில் கலந்துகொண்ட முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்:
பல சோதனைகளை கடந்த நான் இந்த சாதனையை மேற்கொண்டேன்.கிரிக்கெட் எனக்கு புகழை தந்தது. கடினமாக உழைத்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம். கிரிக்கெட்டில் தற்பெருமை கூடாது' எனது சாதனையை தகர்க்க ஹர்பஜன்சிங்குக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
அனில் கும்ளே எனது சிறந்த நண்பர் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.







0 comments:
Post a Comment