Friday, December 18, 2009

பெண்களுக்கிடையிலான சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?


பெண்கள் ஆண்களை விட தம்மை வெகு குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். சமூகத்தில் பெண்கள் தாம் இரண்டாம் நிலையிலேயே இருப்பதாகத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் பெண்களின் சக்தி பலம் வாய்ந்தது என்பதை, ஏனோ அவர்கள் மறந்து விடுவதுதான் வேதனைக்குரியது. ஆண்களை சவலாகப் பெண்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் பெண்களின் சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?


சமூகத்தில் பெண்களை விட ஆண்களே சக்திவாய்ந்தவர்கள் என்பது சமூகத்தின் கருத்து. அப்படியானால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் எதிர்கொள்வார்களா? அல்லது எதிர்கொள்ளத்தான் ஆண்களால் முடியுமா?
ஆண்கள் உடல், மன வலிமையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் சவால்கள் என்று வரும்போது அவற்றை எதிர்கொள்ள நிச்சயமாக அவர்களால் முடியாது.


இது தொடர்பாக அண்மையில் ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கின்றது.
இதோ அந்த ஆய்வில் வெளியான விடயங்கள் :


* சாதரணமாகத் தனது வீட்டில் அன்றாட வேலைகளைச் செய்யும் பெண், நாள் ஒன்றுக்கு 30 மைல் தூரம் வரை வீட்டுக்குள்ளேயே நடக்கிறாள். ஆனால் ஆண்கள் 5 மைல் தூரம் நடக்கும்போது, அந்த வேறுப்பாட்டை அவர்கள் உணர முடியும்.


* இன்பம் – துன்பம் இரண்டையும் ஒரே அளவில் தாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் இன்பம் என்றால் துள்ளிக் குதிப்பார்கள்.துன்பம் என்றதும் துவண்டு விடுவார்கள்.


* பிரசவ சமயத்தில் பெண்கள் படும் வேதனை… அப்பப்பா…. இதில் ஒரு துளியையாவது தாங்கிக் கொள்ளும் சக்தி ஆண்களுக்கு உள்ளதா என்றால்…? ஊஹூம்… அச்சமயம் பெண்களின் உடலிலிருந்து வெளியாகும் குருதியின் அளவு, ஓர் ஆணின் உடலிலிருந்து வெளியேறுமாயின், அவர் தனது உயிரையே இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.


* கர்ப்பிணி பெண் ஒருவர் மாதாந்தம் வயிற்றில் உள்ள பிள்ளையின் நிறை அதிகரிக்க… அதிகரிக்க… சற்றும் மனம் கோணாமல் சகிப்புத் தன்மையுடன் அதை தாங்கிக் கொள்கின்றாள். அந்தக் குழந்தை இம்மண்ணில் பிறக்கும் வரை இந்தச் சகிப்புத் தன்மை தொடர்கின்றதல்லவா? ஆனால் ஆண் ஒருவருக்கு இவ்வாறான ஒரு சுமையைத் தாங்க முடியுமா? அப்படியே தாங்கினாலும் அவனுக்கு தனது வாழ்வின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுவது உறுதி.


ஜேர்மனியில் தெளிவுபடுத்தப்பட்ட விடயங்கள் இவைதாம்.


இதனால்தான் பெண்கள் ஒரு குதிரைக்கு சமமாகவும் ஆண்கள் சீட்டா என்ற மிருகத்திற்கு சமமாகவும் ஒப்பிடப்படுகின்றார்கள்.
காரணம் : சீட்டா தரையில் ஒரு மணித்தியாலயத்திற்கு 300 யார் மட்டுமே ஓடக்கூடியது. ஆனால் குதிரை அவ்வாறல்ல. சாதாரண வேகத்தில் சென்றாலும் 12-15 வரையிலான மைல் தூரம் அதனால் அதிவேகமாக ஓடமுடியும்; ஓடும். குதிரை நிற்காது ஓடக்கூடியது குதிரையின் மனம் நினைத்தால் மட்டும் அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


இதைத்தான் ஆங்கிலத்தில் பெண்கள் ‘ Constant energy’ – ஆண்கள் ‘Brust of energy’ எனக் குறிப்பிடப்படுகிறது.ஒரு சிறு பிள்ளையின் தாயை எடுத்து கொண்டால், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, பின்னர் அந்த சிறு பிள்ளையின் சுக துக்கத்தில் பங்கு கொண்டு, பிள்ளைகளுக்கு சுகவீனம் ஏற்படும் போதெல்லாம், தவித்துப் போய், மருந்து புகட்டி, இரவிரவாகக் கண் விழித்திருந்து பராமரிக்கின்றாள்.


மறுநாள் அதிகாலை விழித்தெழுந்து மீண்டும் வீட்டு வேலை மட்டுமன்றி அலுவலகம் செல்வதிலும் சுறுசுறுப்பாகி விடுகின்றாள். ஆனால் ஒரு ஆண் சாதாரணமாக 5 மணித்தியாளமாவது உறங்காவிட்டால், அவனால் எந்த வேலையையும் ஈடுபாட்டோடு ஒழுங்காகச் செய்ய முடியாது.


பழக்கவழக்கத்தை எடுத்து கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுவதைக் காண முடியும்.
பாலியல் தொடர்பான விடயத்தில் கூட, பெண்களால் தம் மனதைக் கட்டுப்படுத்தி வாழ்ந்துவிட முடியும்(ஒரு சிலர் இதற்கு விதி விலக்கு). ஆனால் ஆண்களால் அவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது; வாழவும் மாட்டார்கள். இந்த விடயத்தில் கூட ஒரு ஆண் (Active Partner) ஆகச் கருதப்படுகிறார்.


பெண்களின் சிந்தனையில் எத்தனையோ விதமான மாற்றங்கள் உள்ளன. தனது பிள்ளைகள் மற்றும் கணவருக்காகப் பல தியாகங்களைச் செய்யும் – செய்யக்கூடிய மனப்பான்மை ஒரு பெண்ணுக்கு உண்டு.


ஒரு பிள்ளைக்குத் தாயானவள் தன் உதிரத்தையே பாலாக்கி ஊட்டுவது என்பது உலகில் உன்னதமானதாகவே கருதப்படுகின்றது. தாயானால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது செய்யும் ஒரு அரிய தியாகமே இது என்றால் கூட அது மிகையல்ல. பெண்ணானவள் எல்லாவிதத்திலும் உலகில் உயர்ந்தே நிற்கிறாள். இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
‘அன்பு’ எனும் ஊற்று பெருக்கெடுக்கும் உன்னதமான ஓரிடம் என்றால் அது ஒரு தாயின் இதயம் மட்டுமே. பெண்களின் அன்புக்காக ஆண்கள் பல கோணங்களில் ஏங்கித் தவிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதே அன்புக்காக எதையும் செய்யத் தயாராகும் நிலையில் ஆண்கள்… என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இவ்வாறெல்லாம் நாம் குறிப்பிட்டாலும் உலகில் விசித்திரமானது என்ன தெரியுமா? இத்தகைய பெண்களிலும் ஆண்களிலும் கூட விசித்திரமானவர்கள், வித்தியாசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான்.ஆண்-பெண் என்ற இரு வேறுப்பட்ட கருத்துடையவர்கள் ஒன்றைணையும் போதுதான் ஒரு சமூதாயம் முழுமை பெறுகிறது.
ஓர் ஆண் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாகவும், ஊக்கமளிப்பவராகவும் மட்டுமே இருக்க முடியும். கணவர் உழைக்கும் வேதனத்தைக் கொண்டு சிறந்த இல்லறத்தை நடத்துபவளே நல்லதொரு இல்லத்தரசியாகிறாள் ஒரு பெண். இரு மனங்கள் ஒன்றிணைந்த திருமண பந்தத்தைக்கூட சிறப்புடன் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு பெண்ணுக்கு உள்ளது.


மார்க்கிரட் தாட்சர், பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கைகளைக் கண்டு முழு உலகமுமே வியந்து போனது.


முக்கியமான ஒரு விடயம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணின் சக்தி அந்தப் பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான். அந்தச் சக்தியை அவள் உணர்ந்து கொண்டால், அவள் தனது பிழைகளையும் திருத்திக் கொள்ளவும் குறைகளை நிறைகளாக்கவும் முடியும்.
ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் எதிர்பார்ப்பது ஆறுதல், சந்தோஷம், நிம்மதி ஆகியவற்றைத்தான். இவை அனைத்தும் மனைவி – தாய் என்ற இரு உன்னதமான உறவுகளில் தான் அவனுக்குக் கிடைக்கின்றன என்பதை அவன் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் ஒரு பெண் – தாய் அனைத்தையும் தாங்கும் ‘பூமி மாதா’ என அழைக்கப்படுகின்றாள். இதில் தவறேதும் இல்லையல்லவா?
முன்னாள் உயர் நீதிமன்றநீதிபதி செனவிரத்ன பண்டார ஒரு ஊடகவியலாளர் கருத்தரங்கில் தான் ஆராய்ந்த விடயங்கள் தொடர்பில் இவவாறு கூறியுள்ளார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites