Monday, August 30, 2010

6 அடி 9 அங்குலம் உயரத்தை உடைய சிறுமி


எனது உயரமே எனக்கு சாதமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பிரேலிலை சேர்ந்த 14 வயது சிறுமியான எலிசனி சில்வா கூறுகிறார்.

பிரேசில் நாட்டைசேர்ந்த 14 வயது சிறுமியான எலிசனி சில்வா 6 அடி 9 அங்குலம் உயரத்தை கொண்டவர் ஆவார்.

அரவது உயரமே அவருக்கு சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் கூட பயணிக்க முடியாதவராக காணப்படுகிறார்.

தனக்கு மாடலிங்கில் தான் விருப்பம் என்றும் அவர் கூறுகிறார்.

பிலேமில் இடம்பெற்ற மண்பெண் அலங்கார மாடலிங் போட்டியில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரேஸில் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகில் மிக உயரமான சிறுமியாக மார்வடெனி அண்டசன் காணப்படுகிறார்.அவர் 6 அடி 11 அங்குலம் உயரத்தை கொண்டவராவர். ___ E-mail to a friend

கிரிக்கெட்டில் தற்பெருமை கூடாது':முரளிதரன்


இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.



முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்தமையை கௌரவிக்கும் முகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு 800 எண் பதித்த டிசேர்ட்டை முரளிதரனுக்கு பரிசளித்தார்கள். வீரர் வி.பி.சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின், ஜகாதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு முரளிதரனை வாழ்த்தினார்கள்.



இந்த விழாவில் கலந்துகொண்ட முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்:



பல சோதனைகளை கடந்த நான் இந்த சாதனையை மேற்கொண்டேன்.கிரிக்கெட் எனக்கு புகழை தந்தது. கடினமாக உழைத்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம். கிரிக்கெட்டில் தற்பெருமை கூடாது' எனது சாதனையை தகர்க்க ஹர்பஜன்சிங்குக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.



அனில் கும்ளே எனது சிறந்த நண்பர் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

Sunday, August 29, 2010

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரசியம் அறியப்பட்டுள்ளது


உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.



மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.



இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.


மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Saturday, August 28, 2010

'யூ டியூபில் இணையத்தள தியட்டர்' சேவை ஆரம்பம்


உலக மக்களை காணொளி வலைப்பின்னல் மூலம் கவர்ந்த இணையத்தள சேவையான 'யூ டியூப் யூகே'(YouTube UK )'யூ டியூப் தியேட்டர் ' என்ற சேவையை ஆரம்பித்துள்ளது.


இதில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைவாக பல திரைப்படங்களை யூ டியூப் இல் வெளியிடும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் ஹொலிவூட்,பொலிவூட் மற்றும் காட்டூன்களை இலவசமாக பார்வையிடலாம்.

Thursday, August 26, 2010

மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் உலக அன்னை


கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை திரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.


இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.


அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை , அவரது மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.


இவர், அல்போனியாபின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.


ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதனைலில் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.


1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் எடுத்துக்கொண்டார் கன்னிகாஸ்திரியானார் . மதபிரசாரகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அரபணிக்காக தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மஷெனரி ஒப் சரிட்டி இல்லம் ஸ்தாஅபிக்கப்பட்டு தீய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறகரை உடைய வெள்ளை கைத்தரி சேலையை அணிந்தார்.


அன்னையிடம் முதன் முறையாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயர்பெயரை சூட்டினார். இவரது பணிக்கு 1980 ஆம் ஆண்டு பிரிடிஷ் மகாரானியாரின் கையால் கௌரவ விருதும் வழங்கப்பட்டது.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து பிளிக் கிளிண்டனின் கையால் கௌரவ பிரஜாவுரிமைய வழங்கினார்.


வேல்ஸ் இளவரளி டயானாபின் மரணத்தை கண்டு மனம் வருந்தினார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அவர் உயிர் நீத்தார். அவரது மரணத்தின் பின்னர் சகோதரி நிர்மலா என்பவர் மஷெனரி ஒப் சரிட்டி சேவை இல்லத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


என்னை எம்மை விட்டு மரைந்தாலும் எம் மனங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

Wednesday, August 25, 2010

சூரியனை ஒத்த புதிய கோள் கண்டுபிடிப்பு


சூரியனை ஒத்த கோளை சுற்றிவருவதும் ஏழு கோள்களை உள்ளடக்கியதுமான புதிய கோள் தொகுதியொன்று பூமியிலிருந்து 127 ஒளி வருட தூரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.



இதுவரை சூரியனுக்கு அப்பால் கண்டுப்பிடிக்கப்பட்ட கோள் தொகுதிகளில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறு வருட ஆராய்ச்சியின் பின்னரே தாம் இதனை கண்டுபிடித்ததாக விஞ்ஞானி டாக்டர் கிரிஸ்ரோபெ லோவுஸ் தெரிவிக்கின்றார்.



இந்தக் கோள் தொகுதியின் பிரதான நட்சத்திரம் HD 10180 என அழைக்கப்படுகிறது.



இதைப் போன்ற ஒரு கோள்தொகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இதன் மூலம் கோள்கள் தொடர்பான ஆய்வுகளில் தாம் புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாகவும் டாக்டர் கிரிஸ்ரோபெ லோவுஸ் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த நட்சத்திரம் HARPS எனப்படும் கோள்களை இனங்காணும் கருவியினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்(காணொளி இணைப்பு) _

சந்திரன் படிபடியாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


சந்திரன் குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.





Tuesday, August 17, 2010

இலங்கை வீரர் மன்னிப்பு கேட்டதாக செவாக் டுவிட்டரில் தெரிவிப்பு


நேற்றைய போட்டியில் சதம் நழுவவிட்ட சேவாக் தனது 'டுவிட்டர்' கணக்கில், "இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரண்தீவ் எனது அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்" என சற்று முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியில் ஷேவாக்கின் நேர்த்தியான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

இருப்பினும் அவரது சதம் கைநழுவிச் சென்றது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாகும். அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது, அவரது சதத்திற்கும் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.

அந்த பந்தை அவர் அடிக்க முற்பட்ட வேளை அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால், அதன் மூலம் 'எக்ஸ்ட்ரா' வகையில் ஒரு ஓட்டம் கிடைத்ததால் இந்திய அணி இலக்கை எட்டியது. இதனால் ஷேவாக்கின் சதம் வாய்ப்பும் நழுவிப்போனது இங்கு குறிடத்தகக்தாகும். , , ,

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites