Thursday, August 26, 2010

மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் உலக அன்னை


கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை திரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.


இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.


அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை , அவரது மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.


இவர், அல்போனியாபின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.


ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதனைலில் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.


1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் எடுத்துக்கொண்டார் கன்னிகாஸ்திரியானார் . மதபிரசாரகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அரபணிக்காக தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மஷெனரி ஒப் சரிட்டி இல்லம் ஸ்தாஅபிக்கப்பட்டு தீய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறகரை உடைய வெள்ளை கைத்தரி சேலையை அணிந்தார்.


அன்னையிடம் முதன் முறையாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயர்பெயரை சூட்டினார். இவரது பணிக்கு 1980 ஆம் ஆண்டு பிரிடிஷ் மகாரானியாரின் கையால் கௌரவ விருதும் வழங்கப்பட்டது.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து பிளிக் கிளிண்டனின் கையால் கௌரவ பிரஜாவுரிமைய வழங்கினார்.


வேல்ஸ் இளவரளி டயானாபின் மரணத்தை கண்டு மனம் வருந்தினார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அவர் உயிர் நீத்தார். அவரது மரணத்தின் பின்னர் சகோதரி நிர்மலா என்பவர் மஷெனரி ஒப் சரிட்டி சேவை இல்லத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


என்னை எம்மை விட்டு மரைந்தாலும் எம் மனங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites