
நேற்றைய போட்டியில் சதம் நழுவவிட்ட சேவாக் தனது 'டுவிட்டர்' கணக்கில், "இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரண்தீவ் எனது அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்" என சற்று முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியில் ஷேவாக்கின் நேர்த்தியான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.
இருப்பினும் அவரது சதம் கைநழுவிச் சென்றது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாகும். அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது, அவரது சதத்திற்கும் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.
அந்த பந்தை அவர் அடிக்க முற்பட்ட வேளை அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால், அதன் மூலம் 'எக்ஸ்ட்ரா' வகையில் ஒரு ஓட்டம் கிடைத்ததால் இந்திய அணி இலக்கை எட்டியது. இதனால் ஷேவாக்கின் சதம் வாய்ப்பும் நழுவிப்போனது இங்கு குறிடத்தகக்தாகும். , , ,







0 comments:
Post a Comment