Tuesday, June 15, 2010

இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்



இருதய நோய்களுக்கா பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகள் புற்றுநோயை ஏற்படுத்த வழிவகுப்பதாக ஏ.ஆர்.பி எனப்படும் (angiotensin-receptor blockers ) ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இருதய நோய்களுக்காக சிகிச்சை பெற்ற 105 நோயாளர்கள் புற்றுநோய்க்கு இலக்காகி உள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், 9 தடவை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இது விவரம்அறியப்பட்டுள்ளது என்கின்றனர்.

இந்த மருந்து வகைகளை முழுமையாக உட்கொள்ள வேண்டாம் என நாம் மக்களை அறிவுறுத்தவில்லை. வைத்திய ஆலோசனைக்கமைய உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என ஷெஃபீல்ட் பல்கலைகழக (University of Sheffield ) ஆய்வாளர் டாக்டர் டிம் சிக்கோ தெரிவித்துள்ளார்.

சில மருந்து வகைகளைப் பயன்படுத்தும் போது, இரத்த அழுத்தம் அதிகரிப்பதனால அது புற்று நோய்க்கு வழிவகுப்பதாக அமைகிறது.

2003 ஆம் ஆண்டு 68,000 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கான உரிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites